சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.
2018-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்களுக்கான விருதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்தது.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி 3 ஐசிசி விருதுக்கு தேர்வாகி உள்ளார்.
2018-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் (சோபர்ஸ் டிராபி), சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் என 3 விருதுகளை தட்டிச் சென்றுள்ளார்.
இதன் மூலம் விராட் கோலி புதிய வரலாறு படைத்தார். ஒரே ஆண்டில் (சிறந்த வீரர், டெஸ்ட், ஒரு நாள் போட்டி) 3 ஐசிசி விருதுகளை பெற்ற முதல் வீரர் ஆவார்.
கோலி கடந்த ஆண்டில் 13 டெஸ்டில் விளையாடி 1,322 ரன் எடுத்தார். சராசரி 55.08 ஆகும். இதில் 5 சதம் அடங்கும்.
14 ஒரு நாள் போட்டியில் விளையாடி 1,202 ரன் எடுத்தார். இதில் 6 செஞ்சூரிகள் அடங்கும். சராசரி 133.55 ஆகும்.
பத்து 20 ஓவர் போட்டியில் விளையாடி 211 ரன் எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டில் அவர் டெஸ்ட், மற்றும் ஒரு நாள் போட்டியில் மிகவும் அபாரமாக விளையாடியதால்,
ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் என 3 விருதுகளை அள்ளிச் சென்றுள்ளார்.